sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அஞ்சல் ஓட்டக்காரர்!

/

அஞ்சல் ஓட்டக்காரர்!

அஞ்சல் ஓட்டக்காரர்!

அஞ்சல் ஓட்டக்காரர்!


PUBLISHED ON : பிப் 17, 2019

Google News

PUBLISHED ON : பிப் 17, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கேரளாவில், மன்னராட்சியின் போது, தபால்காரரை, 'அஞ்சல் ஓட்டக்காரன்' என்றழைத்தனர். தமிழக - கேரள எல்லையில், மறையூர் காட்டுப் பகுதியில் வாழ்ந்து வந்த கண்ணன், வயது, 90. சமீபத்தில் காலமானார். திருவாங்கூர் மன்னராட்சியின் போது, அரசு ஆவணங்களை, வேறு ஊருக்கு எடுத்து செல்பவரை தான், அஞ்சல் ஓட்டக்காரர் என்பர்.

'மலப்புலய' சமுதாயத்தை சேர்ந்தவர், கண்ணன். 1950களில், வாகனங்கள் மிக குறைவாக இருந்தபோது, இவர், காட்டுப் பாதைகளில், தினமும், 16 கி.மீ., துாரம் ஓடி தான், வேலை செய்து வந்தார். ஒரு கையில், அரசு முத்திரை பதித்த ஈட்டி, பல மணிகள் பொருத்திய பட்டை மற்றும் மற்றொரு கையில் ஒரு மணி, இது தான் அவர் வேடம்.

'ஓய்... ஓய்...' என்று கூவியபடியே ஓடும் இவரை, யாரும் தடுக்க முடியாது. தடுத்தால், ஈட்டியால் தாக்குவார். அச்சமயத்தில், உயிரிழப்பு ஏற்பட்டாலும், சட்டப்படி, அது குற்றமாகாது.

ஜோல்னாபையன்.






      Dinamalar
      Follow us