தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : மே 12, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 12, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எங்கே இருக்கிறது?

* எங்கே இருக்கிறது

எதில் இருக்கிறது

மனிதன் தேடி அலைகிற

மகிழ்ச்சி...

* பேராசை

முடிகிற போது

பேரின்பம்

தொடர்கின்றன!

* போதும் என்ற

மனதில் தான்

புன்னகை மலர்கள்

மலர்கிறது!

* தட்டிப் பறிப்பதில்

இல்லை...

விட்டுக் கொடுப்பதில்

இருக்கிறது

நிம்மதி!

* 'நான்,

எனது' என்ற

சுயநலத்தை

துறந்த மனமே

பேரின்பத்தில்

திளைக்கிறது!

* எங்கே...

எதில் இருக்கிறது

மனித மனம்

தேடி அலைகிற

மகிழ்ச்சி!

* பணத்தில்

இல்லை...

பதவியில்

இல்லை

பொன்னிலும்

மண்ணிலும்

இல்லவே இல்லை!

* வேறெங்கும் இல்லை...

மனிதன் தேடும் மகிழ்ச்சி

அவனின்

மனதுக்குள் தான்

இருக்கிறது!

நெப்போலியன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us