sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஜூன் 30, 2013

Google News

PUBLISHED ON : ஜூன் 30, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காதலோடு வாழ்வோம்!

* ஒரு மலர் விட்டு

மறு மலர் தாவும்

பட்டாம் பூச்சியாய்

பறப்பது

என்ன மனம்?

* கள்ளூறும் மலராய்

கன்னி நீ இருக்க

காகித மலரைச்

சூடுவதில்

ஏது மணம்?

* கங்கை நதியாய்

காதலி நீ இருக்க

கானல் நீரை

தேடுவதில்

என்ன சுகம்?

* உனக்கான பாடல்

வடித்து இருக்க

ஊருக்காக அதைப்

பாடுவதில்

என்ன பயன்?

* உன்னிடம் கொடுக்க

எழுதிய கவிதையை

வேறு பெண்ணிடம்

படிக்க எண்ணுவது

என்ன மனம்?

* உன்னோடு வாழ

முடியாமல் போனால்

உன் நினைவோடு

உலகில் வாழ்வேன்!

* துணையாக நீ

வராது போனால்

தனியாக நான்

பயணம் செல்வேன்!

* ஒன்றைப் பிரிந்து

வீழ்வதை விட

காதல் உள்ளதென

கருதுவதே சுகம்!

* காதலால் சிலரது

இதயம் பாதிக்கலாம்

கடந்து விட்டால்

எதையும் சாதிக்கலாம்!

பா.கபிலன், சென்னை.






      Dinamalar
      Follow us