
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நன்றி சொல்லலாமே!
சிரிக்கின்ற பூக்களுக்கு
குளிர்கிற பனிமழைக்கு
நிழல்தரும் மரங்களுக்கு
நன்றி சொல்ல கொஞ்சம்
நேரம் ஒதுக்கினால் என்ன!
அருந்தத் தந்த தாய்ப்பாலுக்கு
விரும்பி தோள் சுமந்த தகப்பனுக்கு
நன்றி சொல்ல கொஞ்சம்
நேரம் ஒதுக்கினால் என்ன!
வழிகாட்டும் எழுத்துகளுக்கு
துணையிருக்கும் நண்பர்களுக்கு
கைவிடாத நம்பிக்கைகளுக்கு
நன்றி சொல்ல கொஞ்சம்
நேரம் ஒதுக்கினால் என்ன!
கவனக்குறையை உணர்த்திய தோல்விகளுக்கு
வைராக்கியம் வளர்த்த அவமானங்களுக்கு
பாராட்டும்படி வளரச்செய்த பரிகாசங்களுக்கும்
மனதிற்குள்ளாவது
மனமார நன்றி சொல்லலாமே!
— ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை.

