sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : மார் 20, 2016

Google News

PUBLISHED ON : மார் 20, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு மழலையின் குரல்!

நான் கருவில்

உருவாகும் முன்னரே

பள்ளியில் இடம்

பிடித்து விட்டனராம்!

நான் பேச முயன்றது

தாய்மொழி அல்ல

ஆங்கிலத்தின்

அறிமுகம்!

நடந்தவுடன் வந்தது

இரு சக்கர வண்டி...

முதலில் சிறியது

அப்புறம் பெரியது!

நான் விளையாட

எத்தனை வகைகள்...

பந்தாட்டம், சதுரங்கம்

நீச்சல் என்று

எத்தனையோ வகுப்புகள்!

ஓயாத படிப்பு நடுவே

இவைகளையும்

படிக்க வேண்டிய

நிர்பந்தம், ஆணை!

கணினி தான் என்

நெருங்கிய நண்பன்

கைபேசி தான்

என் காவலன்!

நான் எனக்காக

வாழப் பிறந்தவனா...

இல்லை உங்கள்

நிறைவேறாக் கனவுகளை

நிஜமாக்க வந்தவனா?

அன்புள்ள பெற்றோரே...

நான் ஒரு தனி மனிதனா

இல்லை சாவி கொடுத்தால்

ஆட வேண்டிய பொம்மையா?

ஜி.சுவாமிநாதன், சென்னை.






      Dinamalar
      Follow us