sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : டிச 27, 2020

Google News

PUBLISHED ON : டிச 27, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தயங்காதே!

அடியெடுத்து நடந்தால் தான்

பயணம் தொடரும்

அமர்ந்தே இருந்து விட்டால்

சோம்பல் தான் படரும்!

விதையிட்டு வளர்த்தால் தான்

விளைச்சல் கிடைக்கும்

புதர் மண்ட விட்டு விட்டால்

வறட்சியில் தான் தவிக்கும்!

எழுத்துக் கூட்ட முயன்றால் தான்

கல்வியறிவு வளரும்

மவுனித்து கிடந்து விட்டால்

அறியாமையில் தான் இடறும்!

கரையெழுப்ப துணிந்தால் தான்

நீர் கூட தேங்கும்

மதியாமல் போய் விட்டால்

உயிர்கள் தான் ஏங்கும்!

தயங்குகிறவன் எப்போதுமே

அடுத்தவருக்கு கை தட்டல் தருகிறான்

துணிந்தவன் எந்நாளுமே

தனக்கான கை தட்டலைப் பெறுகிறான்!

தயங்கிக் கிடந்தால்

பிறரின் வரலாற்றை படிப்பாய்

முயன்று எழுந்தால்

உனக்கான வரலாறு படைப்பாய்!

அ.ப.சங்கர்,

அம்பாபுரம், சிதம்பரம்.






      Dinamalar
      Follow us