PUBLISHED ON : ஜன 22, 2012

அ நிறம் | அளவு
நாம் இந்தியர்கள்!
* நம்மை வெல்ல யாரும் இல்லை...
* எந்திரத்தை கட்டியணைத்து,
உறவுகளை தொலைத்துவிட்டு
வாழும் அந்நியர்கள் அனைவருமே
நம்மிடம் தான் கற்றுக் கொள்கின்றனர்
குடும்ப உறவை!
* உலகமே தலை மீது வைத்து
கொண்டாடும் கலைகளை
படைத்துவிட்டு,
கர்வம் கொள்ளாமல்
கைகட்டி நிற்கிறோம்
ஞானத்தோடு!
* நம்மை பார்த்து,
ஒற்றுமையை கற்றுக்கொள்ளட்டும்
அண்டை நாடுகள்...
பல மொழிகளையும்
இனங்களையும் கொண்ட நாம்,
அன்பால் கைகோர்த்து நிற்கிறோம்!
* இங்கு சூழ்நிலையால்
கண் இழந்தவர்கள் இருக்கின்றனர்...
ஆனால்,
கருணையில்லாதவர்கள் யாரும் இல்லை!
* ஆகையால்,
உறுதியோடு பெருமைப்பட்டு கொள்வோம்
அன்பாலும், கருணையாலும்
நம்மை வெல்ல யாரும் இல்லை!
— கருநீலவண்ணன், ஈரோடு.
