sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

உலக நாடுகளில், பொங்கல் விழா!

/

உலக நாடுகளில், பொங்கல் விழா!

உலக நாடுகளில், பொங்கல் விழா!

உலக நாடுகளில், பொங்கல் விழா!


PUBLISHED ON : ஜன 11, 2026

Google News

PUBLISHED ON : ஜன 11, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அறுவடை திருநாளை, பொங்கல் திருநாள் என, நாம் கொண்டாடுகிறோம். விவசாயத்துக்கு உதவியாக இருக்கும் இயற்கை வளங்களுக்கு நன்றி தெரிவிக்கும் இந்த விழா, வெவ்வேறு வடிவம் மற்றும் காலங்களில், உலகம் முழுக்கவே கொண்டாடப்படுகிறது. இதுபற்றிய சில தகவல்கள்:

ஆப்ரிக்க பொங்கல்:

ஆப்ரிக்காவின் அறுவடை திருநாள், 'யாம் பெஸ்டிவல்!' யாம் என்பது, நம்ம ஊர் கருணைக்கிழங்கு தான். மழைப்பருவம் முடிந்ததும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடக்கும் திருவிழா. முதல் அறுவடை செய்த, கருணைக்கிழங்கை கடவுளுக்கும், மூதாதையர்களுக்கும் படைத்த பிறகு தான், சமைக்கவோ, விற்பனை செய்யவோ வேண்டும் என்பது, அந்த மக்களின் வழக்கம்.

மேற்கு ஆப்ரிக்க பொங்கல்:

மேற்கு ஆப்ரிக்காவின், கானா நாட்டினர் கொண்டாடும் பிரமாண்டமான அறுவடைத் திருவிழா, 'ஹோமோவா!' முதல் பழங்கள் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது. முதலில் அறுவடை செய்யும் திராட்சை, இதர பழ வகைகள் மற்றும் விவசாயப் பொருட்களை கடவுளுக்கு படைத்து சாப்பிட்டால், அவை புனிதமாகும் என்பது அவர்களின் நம்பிக்கை. மே மாதத்தில் நடக்கும் இந்த திருவிழாவின் போது, சிறுதானியங்களை விதைப்பதும் நடக்கும்.

இஸ்ரேல் பொங்கல்:

இஸ்ரேலியர்களின் வேதப்புத்தகம், தோரா. அதில் கூறியபடி, ஏராளமான அறுவடைத் திருவிழாக்களை அவர்கள் கொண்டாட வேண்டும். இவற்றுள் முக்கியமான திருவிழா, 'சுக்கோத்!' இந்த திருவிழா, ஏழு நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும். இந்த திருவிழா மத மற்றும் வேளாண்மை சார்ந்த விழாவாக கொண்டாடப்படுகிறது. அறுவடை செய்யும் திராட்சை மற்றும் இதர பழ வகைகளை படைப்பர். வயல்களிலேயே தங்கிக் கொண்டாடுவதும், இவர்களுடைய வழக்கம். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இது கொண்டாடப்படும்.






      Dinamalar
      Follow us