PUBLISHED ON : ஜன 08, 2012

கவிதைச்சோலை!
* என்னை தயவு கூர்ந்து
அவமானப்படுத்துங்கள்...
என் வெற்றி நாள்
எல்லாருக்கும்
உவமையாகட்டும்!
* என்னை புறந்தள்ளி
பேசுங்கள்...
அப்போது தான்
நான் உங்கள் அகத்தில்
நிரந்தர இடம் பிடிப்பேன்!
* என்னை அலட்சியப்படுத்துங்கள்...
அன்று முதல் நான்
லட்சியவாதிகளின்
முன் மாதிரியாவேன்!
* என்னை இழிவு படுத்துங்கள்...
அது என்னை
வலிமையுள்ளவனாக்கட்டும்!
* என்னை கேவலப்படுத்துங்கள்...
அது என் வாழ்வை
வளமாக்கப் பயன்படட்டும்!
* என் தோல்வியை
எள்ளி நகையாடுங்கள்...
அப்போது தான்
அதைவிட பலமான
கைத்தட்டல்களை
உங்களிடமிருந்து
பெற முடியும்!
* சரித்திரம் படைத்தவர்கள்
சாதிப்பதற்கு முன்
சந்தித்தவை தான் இவை!
* எவ்வளவு துயரங்களும்
கஷ்டங்களும் இடர்பாடுகளும்
இடை வருகிறதோ
அவ்வளவும்
வெற்றிக்கான ஆற்றலை
திகரிக்கும் உந்து சக்திகள்!
* ஆகவே என் மதிப்புக்குரியோரே...
என்னை திட்டுங்கள்
நான் திறம்படவே!
— ந.ஏகம்பவாணன்,
சென்னை.
