PUBLISHED ON : ஜூன் 07, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சினிமா நட்சத்திரங்கள் பலர், வருமானவரி துறையை ஏமாற்றி, கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதை பார்த்து இருக்கிறோம். ஆனால், ஒருசிலர் மட்டுமே, மனிதாபிமானத்துடன் பிறருக்கு உதவுவதை லட்சியமாக கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தான் சுஹாசினி. இவர், தன்னுடைய, 'நாம் பவுண்டேஷன்' என்ற, தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆதரவற்ற பெண்களுக்கு உதவி வருகிறார்.
முதலில், ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்தார் சுஹாசினி. கணவர் மணிரத்தினம் நான்கு லட்சம் ரூபாயும், அவர் நண்பர்கள் இரண்டு லட்சம் ரூபாயும் கொடுத்து உதவி செய்தனர். இன்று, வேறு சிலரும் நிதி உதவி செய்வதால், ஆரம்பத்தில், 68 பெண்கள் உதவி பெற்று வந்த நிலையில், தற்போது, 250 பெண்கள் உதவி பெறுகின்றனர். பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும், உதவி வருவதாக கூறுகிறார் சுஹாசினி.
— ஜோல்னாபையன்.

