
* வெட்டி வேரை நீரில் ஊற வைத்து, வடிகட்டி எடுத்து, தர்பூசணி பழத்தை துண்டாக நறுக்கிப் போட்டு, ஒரு முழு எலுமிச்சம் பழத்தை அதில் பிழிந்து, அவற்றை அருந்தினால், கோடையின் எரிமலை உஷ்ணமும், பனிமலையாகும்
* கோடையில் ஏற்படும் நீர்கடுப்பு நீங்க, எலுமிச்சை சாற்றில், சம அளவு நல்லெண்ணெய் கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்
* பித்தம் அதிகமாக உள்ளோர், நிறைய எலுமிச்சை சாறு பருக வேண்டும்
* எலுமிச்சை பழச்சாறு, சிறந்த காலரா தடுப்பு மருந்து; அதனால், அடிக்கடி எலுமிச்சை சாறு குடிக்கலாம்
* தினமும் இரண்டு வேளை, லெமன் டீ குடித்தால், ஆரோக்கியம் நிச்சயம்; பால் சேர்க்காமல் வெறும் பிளாக் டீயில், சிறிது எலுமிச்சை சாறு கலந்தால், அதுவே, லெமன் டீ. தேவைப்பட்டால், சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்; இல்லையெனில், அப்படியே பருகலாம். உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு ஏற்படும்
* வெல்லம் கரைத்த நீரில் சுக்கை தட்டிப்போட்டு, எலுமிச்சை சாறு பிழிந்து அருந்துவது, கோடை வெயிலுக்கு மிகவும் நல்லது!

