PUBLISHED ON : ஏப் 17, 2022

அ நிறம் | அளவு
நாம் காணும் ஊர்கள் மற்றும் சம்பவங்கள் புராணங்களுடன் இணைந்தே இருக்கின்றன. ராமரும், கிருஷ்ணரும் செல்லாத இடங்களின் பெயர்கள் கூட, அவர்களுடன் இணைத்தே அழைக்கப்படுகின்றன.
உத்தராஞ்சல் மாநிலத்தில், கடல் மட்டத்திலிருந்து, 8,000 அடி உயரத்தில் அழகான பெரிய ஏரி ஒன்று இருக்கிறது. எப்போதும் குளிர்ச்சியான நீர் நிரம்பிய இந்த ஏரியில், தேவர்கள் வந்து குளித்து மகிழ்ந்து, தேவலோகம் திரும்புவதாக இங்குள்ளவர்கள் நம்புகின்றனர்.
எனவே, ஏராளமான சுற்றுலா பயணியர் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இந்த ஏரி தண்ணீரை தலையில் தெளித்தும், பாட்டிலில் எடுத்தும் செல்கின்றனர்.
— ஜோல்னாபையன்
