தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இயற்கை அழகை ரசிக்க, நின்று செல்லும் ரயில்!

இயற்கை அழகை ரசிக்க, நின்று செல்லும் ரயில்!

இயற்கை அழகை ரசிக்க, நின்று செல்லும் ரயில்!


PUBLISHED ON : மே 29, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 29, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரயில் பயணங்களின்போது, எதிர்படும் இயற்கை காட்சிகள் நம் மனதை கொள்ளை கொள்ளும். 'ரயில் மெதுவாக செல்லக் கூடாதா... அப்படி சில நிமிடங்கள் நின்று சென்றால், இன்னும் கொஞ்ச நேரம் ரசிக்கலாமே...' என்று, ஏங்குவதும் உண்டு.

இந்த ஏக்கத்தைப் போக்க வந்து விட்டது, 'இந்துார் ஹெரிடேஜ்' ரயில்.

மத்திய பிரதேசம், அம்பேத்கர் ரயில் நிலையத்திலிருந்து, காலக்குண்ட் வரை, 15 கி.மீ., துாரம் வரை செல்லும் இந்த ரயில் தான், பயணியருக்காக சிறப்பு வசதியை அளிக்கிறது.

இந்த பாதையில் அழகிய இயற்கை காட்சிகளும், படால்பானி என்ற அருவியும் உள்ளது. அருவி உள்ள இடத்திற்கு வந்ததுமே, ரயில், குறிப்பிட்ட நேரம் நின்று செல்லும். அப்போது, பயணிகள், இறங்கி, அருவியை ரசித்த பின், மீண்டும் ரயிலுக்கு திரும்பி விடலாம்.

மணிக்கு, 6 கி.மீ., வேகத்தில் இந்த ரயிலில் பயணம் செய்ய, சுற்றுலா பயணியர் குவிந்து வருகின்றனர்.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us