sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க...

/

குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க...

குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க...

குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க...


PUBLISHED ON : நவ 10, 2019

Google News

PUBLISHED ON : நவ 10, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* குழந்தையிடம், நீங்கள் உண்மையே பேச வேண்டும். அதன் முன்னிலையில், யாரிடமும் பொய் சொல்லாதீர்.

* 'வேண்டாத விருந்தாளிகள் யாராவது, 'அப்பா இருக்காரா...'ன்னு கேட்கும்போது, இல்லைன்னு சொல்லு...' என்று, உங்கள் குழந்தையை விட்டு சொல்லக் கூடாது

* உங்கள் குழந்தையை, கடுமையான தண்டனைக்கு உள்ளாக்காதீர். அந்த பயமே, பொய் சொல்ல துாண்டும்

* குழந்தையின் கற்பனை சக்தியை வளர்ப்பது நல்லது தான். அதிலேயே அதிக கவனம் செலுத்தி, உண்மைக்கும், கற்பனைக்கும் வேறுபாடு தெரியாமல் செய்து விடாதீர்

* 'இதைச் செய்யாதே, அதை தொடாதே...' என்று, பல கட்டுப்பாடுகளை சுமத்தாதீர். அதிக தடைகள் ஏற்பட்டால், அவற்றை கடைப்பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு, பொய் சொல்ல நேரிடலாம்

* பொய் சொல்வதால் ஏற்படும் தீமை பற்றி மிகைப்படுத்தி, குழந்தைக்கு உபதேசம் செய்யாதீர். சிறிய தவறு நேரிட்டால், என்ன கெடுதல் வந்து விடுமோ என்று பயந்து, பலவகையான மனக் குழப்பங்களுக்கு ஆளாக நேரிடும். மாறாக, உண்மையாக இருப்பதால் ஏற்படும் நன்மை பற்றி, எடுத்துக் கூறுங்கள்

* உண்மை பேசும்போது, உற்சாகமூட்டுங்கள். தவறு செய்த பின், உண்மையை உங்களிடம் ஒளிக்காமல் சொல்லும்போது, செய்த தவறுக்காக கடிந்து கொள்ளாதீர். உண்மை சொன்னதற்காக பாராட்டி, பிறகு, 'இனி இப்படி செய்யாதே...' என்ற வார்த்தையே, அதை திருத்த போதுமானது.

- பொ.பாலாஜி கணேஷ்






      Dinamalar
      Follow us