sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஆக 25, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 25, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெ.ரவிக்குமார், திருப்பூர்: கவிஞர் வைரமுத்துவுக்கு, 'முத்தமிழ் பேரறிஞர் பட்டம்' கொடுத்துள்ளதே, மதுரை தமிழ் இசைச் சங்கம்! அவரை வாழ்த்தினீர்களா?

அவர் அழைத்தார்; வாழ்த்தினேன்!





* சி.சசிகலா, விருதுநகர்: மாணவர்களுக்கு, 1,000 ரூபாய் உதவித் தொகை கொடுப்பதாக அறிவித்து விட்டு, மாணவர்கள் படிக்கும் புத்தகங்களுக்கான வரித் தொகையை, அரசு அதிகரித்திருப்பது நியாயமா?

இல்லை; மாணவர்களுக்கு இத்தகைய சுமையைக் கொடுக்கக் கூடாது!

ஆர்.பிரகாஷ், பொன்மலை: தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது, 62 ஆக உயரப் போகிறதாமே?

கடும் எதிர்ப்பு இருப்பதால், உயராது!

ஜி.அர்ஜுனன், அவிநாசி: கலைஞர் நுாற்றாண்டு, 100 ரூபாய் நாணயத்தில், ஹிந்தி எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளதே?

அச்சா, அச்சா! பஹூத் அச்சா ஹை!!

* எம்.மனோகரன், ராமநாதபுரம்: 'கார் பந்தயத்துக்குச் செலவிடும் பணத்தை, பஸ்களை சீரமைக்க செலவழிக்கலாம்...' என, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளாரே...

செய்ய வேண்டும்; தி.மு.க., அரசு யோசிக்கட்டும்!

வி.வாசுதேவன், கோவை: 'அந்துமணி பதில்கள்' பகுதி, 'தினமலர் - வாரமலர்' இதழ் ஆரம்பித்ததில் இருந்து வருகிறதா அல்லது அதற்கு முன்பே, 'தினமலர்' நாளிதழில் வெளியானதா?

'வாரமலர்' இதழ் ஆரம்பித்த பிறகே!

ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு:டிராபிக் போலீசைக் கண்டு பயந்த அனுபவம் உண்டா?

என் காரைப் பார்த்ததும், வணக்கம் போடுவர்! அனைவருமே என் நண்பர்கள்; அனைவரையுமே, 'கவனித்து' விடுவேன்!

ஜா.ஜேம்சன், திருச்செந்துார்: பள்ளிப் பருவத்தில், முதல் பெஞ்சு மாணவரா, கடைசி பெஞ்சு மாணவரா?

கடைசி பெஞ்ச் தான்; உயரம் அதிகம் என்பதால், கடைசியில் உட்காரச் சொல்லி விடுவர்!

எல்.மகேஷ், மதுரை: நம்மை துாக்கி நிறுத்துவது எது?

அவமானங்களுக்கு நாம் அஞ்சக் கூடாது... நாம் சந்திக்கும் அவமானங்கள் தான், நம்மை செதுக்கும்! நாம் சந்திக்கும் துன்பங்கள் தான், நம்மை துாக்கி நிறுத்தும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us