sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : டிச 01, 2024

Google News

PUBLISHED ON : டிச 01, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வி.பிருந்தா, சென்னை: தனியாக கார் ஓட்ட பிடிக்குமா?

தனியாக, தமிழ் மற்றும் ஆங்கில பாடல்களை கேட்டுக் கொண்டே, பல ஊர்களுக்கும் கார் ஓட்டிச் செல்வேன்!

கோவி.திருநாயகம், கடலுார்: அந்துமணி பதில்கள் பெறுவதற்கு கேள்விகளை இரவெல்லாம் சிந்தித்தே துாக்கம் போகிறதே... இதற்கு ஒரு விடியல் உண்டா?

இதோ விடிந்து விட்டது; துாக்கத்தை தொலைக்காதீர்கள்!

* கே.சுரேஷ், சென்னை: லஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்கும் அரசு ஊழியர்கள் மீது, தற்காலிக பணிநீக்கம் செய்யாமல், பணி இடமாறுதல் செய்தால், அங்கும் லஞ்சம் வாங்காமல் இருப்பரா?

நீட்டிய கை மடங்காது!

டி.ஜெயசிங், கோவை: கள்ளுக்கடை திறந்தால், கள்ளச்சாராயம் ஒழிந்து விடும் தானே?

கள்ளுக்கடைகளில் விலை குறைவாக இருக்கும். அதனால், கள்ளச்சாராயம் ஒழிந்து விடாது!

டி.பசுபதி, ஊஞ்சவேலாம்பட்டி, கோவை: 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் கூறுவது, அரசியல் கட்சியினரை இழிவுபடுத்துவதாக உள்ளது...' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளாரே...

இவர்கள் எல்லாம் ஆட்சியும் அமைக்க மாட்டார்கள்; பதவியும் கிடைக்காது. அதனால் தான் அப்படி கூறுகின்றனர்.

மு.நாகூர், ராமநாதபுரம்: 'பா.ஜ., அல்லாத பிற மாநில அரசுகளை கவிழ்க்க, ஆடுகளை விலை கொடுத்து வாங்குவது போல், பிரதமர் மோடி, எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்குகிறார்...' என, காங்., தலைவர், மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளாரே...

அப்படி எனில், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஆடுகள் என்கிறாரா, மல்லிகார்ஜுன கார்கே?

* எஸ்.விஜய், சென்னை: 'மழைநீரால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு, தி.மு.க., - அ.தி.மு.க., மட்டுமே உதவி செய்கின்றன...' என்கிறாரே, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

அவர்கள் தானே மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றனர். அவர்கள் செய்யாமல் வேறு யார் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்?






      Dinamalar
      Follow us