sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : டிச 29, 2024

Google News

PUBLISHED ON : டிச 29, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.சம்சு, துாத்துக்குடி: 'தண்ணீர் அதிக அழுத்தத்துடன் வரும்போது, பாலம் இடிவது சகஜம் தான்...' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறி இருக்கிறாரே...

கல்லணை, மேட்டூர், பரம்பிக்குளம் அணைகள் எல்லாம் உறுதியுடன் இருக்கின்றன; அணைகளே அப்படி இருக்கும் போது, பாலங்களும் உறுதியுடன் இருக்க வேண்டுமே... ஏன் இல்லை? யார் தவறு?

கே.சுமதி, சென்னை: சிறுகதை எழுதி, வாரமலர் இதழுக்கு அனுப்பி உள்ளேன். கதையை தேர்ந்தெடுத்து வெளியிடுவீர்களா அல்லது நிச்சயம் என்றாவது ஒருநாள் வெளிவருமா?

நல்ல கருத்துள்ள சிறுகதையாக இருந்தால், தேர்வு செய்து விடுவார், பொறுப்பாசிரியர்; நிச்சயமாக வெளிவரும்!

ஆ.கண்ணதாசன், சென்னை: பலரும் பணம் கொடுத்து, அரசு வேலையில் சேர துடிப்பது ஏன்?

லஞ்சம் கிடைக்கும் என்பதால்!

எம்.கே.எம்.கமாலுதீன், கோவை: தினமலர் - வாரமலர் இதழ் கார்ட்டூனில், வி.ஐ.பி.,களின் புகைப்படங்களுக்கு பதிலாக, ஓவியம் வரைகிறீர்களே... அவர்கள் ஆட்சேபனை செய்கின்றனரா அல்லது பாராட்டுகின்றனரா?

அவர்கள் அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்!

* ஆர்.ராஜ்மோகன், விழுப்புரம்: 'நடிகர் ரஜினி, திரையுலக சூப்பர் ஸ்டார் என்றால், நான், அரசியல் உலக சூப்பர் ஸ்டார்...' என்கிறாரே, சீமான்?

அவர், தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொள்ள வேண்டியது தான்!

* எஸ்.கஜலட்சுமி, லால்குடி, திருச்சி: சென்னை சாலைகளில், திடீர் பள்ளம் ஏற்படுவதற்கு என்ன காரணம்?

ஒப்பந்ததாரர்களும், அவர்களை ஆட்டுவிக்கும் அரசியல்வாதிகளும்!

வெ.அனுஷலட்சுமி, சென்னை: 'அறநிலையத் துறையே... கோவிலை விட்டு வெளியேறு...' என, முன்னாள் போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்க வேல் பேசுவது, யார் காதிலும் விழவில்லையே...

பணம் கொழிக்கும் துறை அது; அதனால், யார் காதிலும் விழவே விழாது!






      Dinamalar
      Follow us