sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : மே 11, 2025

Google News

PUBLISHED ON : மே 11, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுதாராணி, கோவை: பத்திரிகைக்கு சிறுகதையை அனுப்பிவிட்டு, வெளியிடுவர் எனக் கருதி, எத்தனை மாதம் காத்திருந்த பின், வேறு பத்திரிகைக்கு அனுப்புவது சரியானதாக இருக்கும்?

சிறுகதையாக இருந்தால், ஆறு மாதங்கள் காத்திருங்கள்; மற்ற பிரிவுகளுக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் காத்திருங்கள். அதற்குள் வெளியாகவில்லை எனில், வேறு பத்திரிகைக்கு அனுப்பி வையுங்கள்!

********

சாரதா சுப்ரமணியன், சென்னை: சில வெளிநாடுகளில், மீண்டும் மிதிவண்டியின் பயன்பாடு அதிகரிக்கக் காரணம் என்ன?

பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணமும், உடல்நலம் மீதான அக்கறையுமே காரணம்!

********

ஜி.அர்ஜுனன், திருப்பூர்: முன்னாள், இன்னாள் முதல்வர்கள், 'ரைமிங்'கில் மோதி கொள்வது நன்றாக இருக்கிறதா?

அரசியல் நாகரிகம் என்பதே இல்லாமல் போய்விட்டது. யார் வேண்டுமானாலும் எதையும் பேசலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

அரசியல் கட்சிகள் இந்த போக்கை தவிர்த்து, நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதை பற்றி யோசிக்கலாம்!

**********

* எம்.கல்லுாரி ராமன், ராமநாதபுரம்: 'ஊழல்வாதிகள், இனி தேர்தலில் போட்டியிடக் கூடாது...' என, நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்குமா?

இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால், ஒருவர் கூட தேர்தலில் போட்டியிட முடியாதே... யாரை வைத்து தேர்தல் நடத்துவது?

********

எம்.சம்சு, துாத்துக்குடி: 'கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால், ஸ்டாலின் என்றால் சாதனை என சொல்லியிருப்பார்...' என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தனக்குத்தானே பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளாரே...

சுயபுகழ்ச்சியில் கைதேர்ந்தவர் ஆகிவிட்டார், ஸ்டாலின். வேறு யாரும் புகழவில்லையே... அவரது அமைச்சர்களுக்கு கட்சியிலும், தங்கள் பதவியை காப்பாற்றி கொள்ளவே,

*********

* எம்.ருக்குமணி, கள்ளக்குறிச்சி: எல்லா அரசியல்வாதிகளும் பொதுமக்களை வெறும் ஓட்டு போடும் இயந்திரமாக பார்ப்பது சரியா?

சிலர், அரசியல்வாதிகளை, பணம் காய்ச்சி மரமாக நினைப்பதால், அவர்கள், மக்களை, ஓட்டு போடும் இயந்திரமாக பார்க்கின்றனர். மக்கள் மாற வேண்டும்!

*********

என்.ஆசைதம்பி, ஆவடி: கவிதை எழுதுகிறவர்களின் மொபைல் எண்ணையும் போட ஆரம்பித்திருப்பது ஏன்?

படைப்பாளிகளுக்கான பாராட்டுக்கள், அவர்களை நேரிடையாக சென்றடையுமே, அவர்கள் மிகவும் சந்தோஷமடைவரே, அதனால் தான்!

**********

எம்.சுப்பையா, கோவை: பொது நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்கேற்கும் போது, வாசகர்கள் உங்களை அடையாளம் கண்டு, ஆட்டோகிராப் கேட்டதுண்டா?

நான் தான் பொது நிகழ்வுகளுக்கு செல்வதை தவிர்த்து விடுகிறேனே!






      Dinamalar
      Follow us