PUBLISHED ON : ஆக 25, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உயர உயரப் பறந்தாலும்
ஊர்க் குருவி பருந்தாகாது...
ஊர்க் குருவி ஏன் பருந்தாக வேண்டும்?
அதற்கென ஓர் ஆற்றல்
அதற்கென ஒரு சாதனை
அதுவே அதன் தனித்துவம்!
உருவத்தில் சிறிய மீன்
ஆறு, கடல், குளம், குட்டையென
எங்கு விட்டாலும் நீந்தும்
நீரின் தன்மை எதுவாயினும்
தன் ஆற்றலைத்தான் மீன்
அதிகம் நம்பியுள்ளது!
முள் செடியில் பிறந்தாலும் ரோஜா
தன் அழகாலும், மென்மையாலும் தான்
அனைவரையும் ஈர்க்கிறது...
அடுத்தவர் மீதான அன்பை வெளிப்படுத்த
ஓர் அடையாளப் பொருளானது
அதுவே அதன் அற்புத ஆற்றல்!
மரங்கள்
மாசடைந்த காற்றை
துாய்மை செய்வதால் தான்
மனிதன் ஆங்காங்கே
மரத்திற்கு மஞ்சள் துணி கட்டி
வணங்குகிறான்...
சேவை மாசற்றதாயிருந்தால்
வணங்குவது உண்மையாய் இருக்கும்!
உன் ஆற்றலை வைத்து
முயன்று பார்...
உன் தனித்தன்மையை நிரூபித்து
வெற்றி பெறுவாய்!
— மு.நடராசன், புதுச்சேரி.