/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை - சுதந்திரத்தை காப்போம்!
/
கவிதைச்சோலை - சுதந்திரத்தை காப்போம்!
PUBLISHED ON : ஆக 11, 2024

* சும்மா கிடைத்து விடவில்லை
இந்த சுதந்திரம்
பசி துாக்கம் மறந்து
இரவு பகல் போராடி
பெற்ற சுதந்திரம்!
* மண் குடித்த ரத்தத்தை
விண் படித்ததோ
வீணாய் போகவில்லை
கடவுளின்
கண் திறந்தது!
* பாரதியின் வீரப்பாட்டில்
அண்ணலின் அகிம்சை
வழியில் கிடைத்த
சுதந்திரம்
பேணி காப்போம்!
* அன்று வெளியேறியது
வெள்ளையர்கள்
இன்னும் உள்ளே இருப்பது
கொள்ளையர்கள்
களைகளை களைவோம்!
* பொருளாதார தரத்தில்
அந்நிய முதலீட்டை
தடை செய்வோம்
சொந்த நாட்டை
முன்னேற செய்வோம்!
* வேலை வாய்ப்பை
பெருக்குவோம்
பாலை நிலங்களையும்
சோலைவனமாய்
மாற்றுவோம்!
* மாசற்ற மனிதர்களாய்
வாழ்ந்து காட்டி
பெற்ற சுதந்தரத்தின்
சரித்திரங்களை
மறவாமல் பயணிப்போம்!
* நிலத்தை நீரை
விவசாயத்தை உழைப்போரை
காத்திடுவோம்
சுதந்திரத்தின்
பலனை பெற்றிடுவோம்!
- சங்கீதா சுரேஷ், தருமபுரி.