sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நம்மிடமே இருக்கு மருந்து - சுரைக்காய்!

/

நம்மிடமே இருக்கு மருந்து - சுரைக்காய்!

நம்மிடமே இருக்கு மருந்து - சுரைக்காய்!

நம்மிடமே இருக்கு மருந்து - சுரைக்காய்!


PUBLISHED ON : பிப் 23, 2025

Google News

PUBLISHED ON : பிப் 23, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளரிக் குடும்பத்தை சேர்ந்த, நீர் காய், சுரைக்காய். இனிப்பு, கசப்பு என, இரு சுவைகளில் இருந்தாலும், இனிப்பு சுவை கொண்டதையே நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம்.

* ஆண்மைக் குறைபாட்டை நீக்க சிறந்தது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. சிறுநீர் பெருக்கத்தை துாண்டும். மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. உடலின் வெப்ப நிலை, பித்தத்தை சமநிலைப்படுத்தும். இதை, பித்த சமனி என்பர்

* கை, கால்களில் குறிப்பாக பாதங்களில் எரிச்சல் நீங்க, சுரைக்காயின் சதைப்பகுதியை துணியில் வைத்து கட்டினால் குணமாகும்

* தினமும் சுரைக்காய் சாறு அருந்தி வந்தால், சிறுநீர் பாதையில் ஏற்படக் கூடிய எரிச்சல் குணமாகும்

* குழந்தை பிறந்த பெண்கள், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும், உடல் எடை குறைக்க நினைப்பவர்களும், சுரைக்காயுடன் பாசிப்பயிறு சேர்த்து கூட்டு வைத்து சாப்பிடலாம்

* சுரைக்காயை அரைத்து உடலில் பூசி வந்தால், உடலின் வெப்பநிலை குறைவதோடு, குளிர்ச்சியும் ஏற்படும்

* சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து, நெற்றியில் தடவி வர, கண் எரிச்சல் குணமாகும். வெயிலில் அதிகமாக அலைவதால் ஏற்படும் தலைவலி, ஒற்றை தலைவலி ஆகியவற்றுக்கு, சுரைக்காயின் சதைப்பகுதியை துணியில் வைத்து, நெற்றியில் கட்டினால் தலைவலி நீங்கும்

* சுரைக்காயுடன் மல்லி, மிளகுத்துாள் மற்றும் உப்பு கலந்து, சாலட் செய்து சாப்பிடலாம்

* சுரைக்காய் குடுவையில், தண்ணீரை சேமித்து வைத்துக் குடித்தால், தாகம் குறையும். அந்த தண்ணீரில் வைட்டமின் சத்துக்களும் நிறைந்திருக்கும். இந்த நீரில், தேனை ஒரு பாத்திரத்தில் வைத்து பாதுகாத்து, சாப்பிட்டு வரலாம்

* சுரைக்காய் இலையுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து கூட்டு வைத்து சாப்பிட்டு வந்தால், நீர் நோய்கள் நீங்கும்

* உடலில் ஏற்படும் வீக்கம், நீரேற்ற நோய்களையும் குறைக்கும்

* சுரைக்காய் இலையுடன் தண்ணீர் சேர்த்து, கஷாயம் தயாரித்து, தேவையான அளவு சர்க்கரை கலந்து சாப்பிட்டால், மஞ்சள் காமாலை சரியாகும்.

- அமுதா அசோக்ராஜா






      Dinamalar
      Follow us