தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கோவிலுக்கு செல்வது ஏன்?

கோவிலுக்கு செல்வது ஏன்?

கோவிலுக்கு செல்வது ஏன்?


PUBLISHED ON : ஏப் 08, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 08, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவில் என்பது வெறும் வழிபாட்டு தலம் மட்டுமல்ல; அது, ஆன்ம பலத்தை தரும் இடம். கோவில்களில் அபரிமிதமான காந்த சக்தியும், பாசிட்டிவ் எனர்ஜியும் நிறைந்துள்ளது.

கோவிலின் மையப்பகுதியில், மூலவர் சிலை இருக்கும் இடத்தை, கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்போம். இந்த மூலஸ்தானம் தான், காந்த மற்றும் பாசிட்டிவ் எனர்ஜி குவிந்துள்ள பகுதி.

பழைய கோவில்களில், கர்ப்பகிரகத்தின் கீழ், செப்பு தகடுகள் பதிக்கப்பட்டிருக்கும்.

இதுவே, கீழே இருக்கும் காந்த சக்தியை பன்மடங்காக்கி வெளிக் கொணரும். மூன்று புறமும் மூடப்பட்டு, வாசல் பகுதி மட்டும் திறந்திருக்கும் கர்ப்பகிரகத்திலிருந்து வெளியேறும் காந்த சக்தி, வாசலில், இடது மற்றும் வலது புறத்தில் நின்று, இறைவனை வணங்கும் பக்தர்களை சென்றடைகிறது. இதனாலேயே, தினமும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், கோவிலுக்கு சென்று வந்ததும், ஒருவித சக்தி, அமைதி கிடைப்பது போல் உணர்கின்றனர்.

மேலும், கர்ப்ப கிரகத்திலிருந்து வெளியேறும் காந்த சக்தியின் சுற்றுப் பாதை, இடமிருந்து வலமாக இருப்பதாலேயே, பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றுகிறோம். அவ்வாறு சுற்றும் போது, காந்த மற்றும் பாசிடிவ் மின் சக்தி நம் உடல், மனம் மற்றும் மூளைக்கு தேவையான சக்தியை தருகிறது.

மூலஸ்தானத்தில், எப்போதும் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்கும். விக்ரகத்திற்கு பின்புறம், ஒரு விளக்கும், அதைச் சுற்றி கண்ணாடியும் வைக்கப்பட்டிருக்கும். அது, ஒளி வட்டம் வருவதற்கு அல்ல; மூலஸ்தானத்திலிருந்து வெளிப்படும் காந்த சக்தியை, அப்படியே திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுதான்.

மந்திரம் சொல்லும் போதும், மணி அடிக்கும்போதும் அங்கே செய்யப்படும் அபிஷேகமும், காந்த சக்தியை மென்மேலும் அதிகரிக்கச் செய்து, அபரிமிதமான சக்தியை கோவில் முழுக்க பரவ செய்கிறது.

அடுத்தது தீர்த்தம்... பச்சை கற்பூரம், துளசி, குங்குமப்பூ, கிராம்பு சேர்த்து, செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்டு, கொடுக்கும் தீர்த்தம், அபரிமித சுவையை தரும்; சில சொட்டு அருந்தினால் கூட, நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இத்தீர்த்தத்தை தினமும் உட்கொள்வோருக்கு, இது, 'ஆன்டிபயாட்டிக்' ஆக செயல்படும். இதனாலேயே, முன்பெல்லாம் கோவிலுக்கு தினமும் சென்று வருவோருக்கு, எந்த வித நோயும் நெருங்காமல் இருந்தது.

அத்துடன், வாய் துர்நாற்றம், பல் மற்றும் ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மையும், இந்த தீர்த்தத்திற்கு உண்டு.

அபிஷேகம் முடிந்து, வஸ்திரம் சாத்தும் போதும், மஹா தீபாராதனை காட்டும்போதும் கதவை திறக்கக் காரணம், சுயம்புக்கு அபிஷேகம் செய்ததால் வெளிப்படும் சக்தி, மொத்தமாக உருவெடுத்து, அங்கு கூடி நிற்கும் மக்களை சென்றடையும். அந்த அபிஷேக நீரை எல்லாருக்கும் தலையில் தெளிக்கும்போது, உடம்பில் சிலிர்ப்பு வரும். இதனால் தான், ஆண்கள் மேல் சட்டை அணியாமல் கோவிலுக்கு வர வேண்டும் என்று கூறுகின்றனர்.

பெண்கள் தாலி அணிவதும் இதுபோன்ற காரணத்தால் தான். ஆண்களை போன்று, பெண்களுக்கு இதய நோய் அதிகம் வருவதில்லை. காரணம், மார்பில் தொங்கும் தாலியில் உள்ள தங்கம், இதயத்தின் வெளியே நல்ல பாசிட்டிவ் எனர்ஜியை உள்வாங்கி, கொழுப்பை கரைக்கிறது.

கோவிலின் மேல் இருக்கும் கலசம், சில சமயம் இரிடியமாக மாறவும், இந்த காந்த சக்தி தான் காரணம். கீழிருந்து கிளம்பும், மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் சாதாரண கலசத்தையும், இரிடியமாக மாற்றுகிறது. கோவிலில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் இருப்பதற்கு, கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள், சிறந்த மின் கடத்தியாக செயல்படுவது தான் காரணம். மேலும், கோவிலின் கொடி மரத்திற்கும், பிரகாரத்திற்கும் நேரடி, 'ஒயர்லெஸ்' தொடர்பு உண்டு.

கொடி மரம் இன்னொரு இடி தாங்கி; கோவிலின் வெளி பிரகாரத்தை காக்கும் சாதனமும் இதுதான்!

- பாலாஜி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us