PUBLISHED ON : பிப் 25, 2018

அ நிறம் | அளவு
கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவைச் சேர்ந்தவர், முகமது செமந்தா, வயது, 50; அந்நாட்டில் உள்ள முக்கிய நகரமான, கடாபியில், கையேந்தி பவன் நடத்தி வருகிறார்.
சமீபகாலமாக, அந்நாட்டில் இவரைப் பற்றி தான், எல்லாரும் பரபரப்பாக பேசுகின்றனர். காரணம், ஒரே நேரத்தில், மூன்று பெண்களை திருமணம் செய்துள்ளார்.
மூன்று பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்வது, புதிய விஷயமல்ல; அதற்கு, அவர் கூறிய காரணம் தான் புதிது... 'நான், ஏழை என தெரிந்தும், மூன்று பெண்களும், என்னையே திருமணம் செய்து கொள்ள பிடிவாதமாக இருந்தனர். தனித் தனியாக திருமணம் செய்தால், செலவு அதிகமாகும்; செலவை குறைப்பதற்காக, மூவரையும், ஒரே மேடையில் மணந்தேன்...' என்கிறார்.
மணப் பெண்களில் ஒருவருக்கு, 48 வயது; மற்றொருவருக்கு, 27; மூன்றாவது பெண்ணுக்கு, 24 வயது.
—ஜோல்னாபையன்.
