/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
தேசிய தோட்டக்கலை வாரியத்தில் பணி
/
தேசிய தோட்டக்கலை வாரியத்தில் பணி
PUBLISHED ON : டிச 19, 2023

மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய தோட்டக்கலை வாரியத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: சீனியர் தோட்டக்கலை அதிகாரி 25, துணை இயக்குனர் 19 என மொத்தம் 44 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: தோட்டக்கலை அதிகாரி பணிக்கு வேளாண்மை / தோட்டக்கலை / உணவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் டிகிரி, இதனுடன் துணை இயக்குனர் பணிக்கு கூடுதலாக ஐந்தாண்டு பணி அனுபவம் தேவைப்படும்.
வயது: 5.1.2024 அடிப்படையில் தோட்டக்கலை அதிகாரி 30, துணை இயக்குனர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500. மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 5.1.2024
விபரங்களுக்கு: exams.nta.ac.in

