/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
பிளஸ் 2 முடித்தவருக்கு பாதுகாப்பு படையில் பணி
/
பிளஸ் 2 முடித்தவருக்கு பாதுகாப்பு படையில் பணி
PUBLISHED ON : ஜூன் 11, 2024

துணை ராணுவப்படைகளில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர், தலைமை கான்ஸ்டபிள் வாரியாக மத்திய ரிசர்வ்போலீஸ் படை 21 & 282 எல்லை பாதுகாப்பு படை 17 & 302, இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை 56 & 163, மத்திய தொழில் பாதுகாப்பு படை 146 & 496, எஸ்.எஸ்.பி., 3 & 5 உட்பட மொத்தம் 1526 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.8.2024 அடிப்படையில் அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு 18 - 25, மற்ற பணிக்கு 20 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, உடல் தகுதி தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100.பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 8.7.2024
விவரங்களுக்கு: rectt.bsf.gov.in