/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மாடி தோட்டத்திலும் பீட்ரூட் நிற கொய்யா
/
மாடி தோட்டத்திலும் பீட்ரூட் நிற கொய்யா
PUBLISHED ON : ஆக 14, 2024

மாடி தோட்டத்தில், பீட்ரூட் நிற கொய்யா சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயி கே.சசிகலா கூறியதாவது:
நம்மூர் கோடை வெயில், மழைக்கு ஏற்றவாறு குளிர், வறட்சியான பிரதேசங்களில் விளையும், பலவித பழ மரங்களை மாடி தோட்டம் மற்றும் நிலங்களில் சாகுபடி செய்யலாம்.
அந்த வகையில், மாடி தோட்டத்தில் பீட்ரூட் நிற கொய்யா சாகுபடி செய்துள்ளேன். இந்த ஒராண்டில் மகசூலுக்கு வருகிறது.
துவக்கத்தில், குறைந்த மகசூல் கிடைக்கும். செடிகளை கவாத்து செய்த பின், அதிக மகசூல் கொடுக்க துவங்கும். இந்த கொய்யா, நாட்டு பாதாம் பழங்களைப் போல, இனிப்பு கலந்த துவர்ப்பு தன்மையுடன் இருக்கும்.
இதுபோன்ற அரிதான பழங்கள் வீட்டுத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தலாம். நேரடி விற்பனை திறன் இருக்கும் விவசாயிகள் விளை நிலங்களில் சாகுபடி செய்து நேரடியாக விற்பனை செய்து, அதிக வருவாய் ஈட்டலாம்.
குறிப்பாக, பீட்ரூட் நிற கொய்யா பழத்தில், அதிக சத்துக்கள் நிறைந்து இருப்பதால், அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்துடன் வாங்கி, சுவைக்கும் வழக்கத்தை வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.சசிகலா,
72005 14168.