/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
சவுடு மண் நிலத்திலும் முந்திரி மரம் வளர்க்கலாம்
/
சவுடு மண் நிலத்திலும் முந்திரி மரம் வளர்க்கலாம்
PUBLISHED ON : ஜூன் 04, 2025

முந்திரி சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், காவாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சு.ரமேஷ் கூறியதாவது:
மணல் கலந்த களிமண் நிலத்தில், கீரை, வேர்க்கடலை, காய்கறி, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்துள்ளேன். அனைத்து விளை பொருட்களுக்கும், ரசாயன உரப் பயன்பாடு அறவே தவிர்த்துள்ளேன்.
இயற்கை உரங்களை பயன்படுத்தி விளை பொருட்களை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், ஆற்றங்கரையையொட்டி, சவுடு மண் நிலத்தில், முந்திரி மரங்களை நட்டுள்ளேன். மா மரங்களை போல, முந்திரி மரங்கள் நன்றாக படர்ந்துள்ளன. முந்திரி மரத்தில் பூ பூக்கும்போது, இயற்கை ஜீவாமிர்த கரைசலை தெளித்து, பூக்கள் உதிர்வதை தடுக்க முடிகிறது. இதன் வாயிலாக, முந்திரி சாகுபடியில் நல்ல மகசூல் பெற முடிகிறது. பழங்கள் மற்றும் முந்திரி கொட்டைகளை உலர்த்தி தரமான முந்திரி பருப்புகளை தரம் பிரிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: சு.ரமேஷ், 81109 44475.