sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

முசுமுசுக்கை (சுக்கை)

/

முசுமுசுக்கை (சுக்கை)

முசுமுசுக்கை (சுக்கை)

முசுமுசுக்கை (சுக்கை)


PUBLISHED ON : ஜன 08, 2014

Google News

PUBLISHED ON : ஜன 08, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இம் மூலிகையின் பெயர் சுக்கை என்கிற முசுமுசுக்கை. சித்தர்கள் இதனை ''ஆஞ்சநேயர் கை'' என்றழைத்தனர். இதன் இலை காசம், கோழை, சுவாசக் கோளாறுகள், புகைக்கம்மல், ஜலதோஷம் ஆகியவற்றை போக்கும் தன்மையுடையது. பித்தம் அதிகமாவதால் ஏற்படும் இறைப்பு (வீசிங்) கட்டுப்படும்.

இது செம்மண் பூமி மற்றும் கரும்புத் தோட்டங்களில் வளரும். பனிக் காலத்தில் ஏற்படும் சுவாசக் கோளாறுகளையும் நீக்கும் தன்மை உடையது. தலை சுற்றலையும் போக்கும். வல்லாரை கீரையைப் போன்று ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்து மூளையை பலப்படுத்தும். இதன் இலையைப் பறித்து லேசாக இடித்து ரசம் வைத்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட பக்கவாதம், பித்த நோய்களைப் போக்கும். இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து ரசப்பொடி போன்று பயன்படுத்தலாம் (புளி சேர்க்காமல் ரசம் வைக்க வேண்டும்). இதில் சுண்ணாம்புச் சத்து அதிகம் இருப்பதால் எலும்புகள் பலம் பெறும்.

சித்தர்கள் இதனை ''ஆஞ்சநேயர் கை'' என்று அழைத்ததில் இருந்தே இதன் மருத்துவ மகிமையை நாம் அறிந்து கொள்ள முடியும். இதுவும் ஒருவித ''சஞ்சீவிக் கீரை'' ஆகும்.

பி.வி.கனகராஜன்,

உடுமலை. செல்: 96594 56279






      Dinamalar
      Follow us