sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

'காதல் ரோஜா'

/

'காதல் ரோஜா'

'காதல் ரோஜா'

'காதல் ரோஜா'


PUBLISHED ON : அக் 31, 2018

Google News

PUBLISHED ON : அக் 31, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மலர்களில் 'மகாராணி' எனவும் 'தோட்ட ராணி' எனவும் அழைக்கப்படும் ரோஜா மலர் சாகுபடி செம்மண்ணுக்கு ஏற்றதே. இதனை வணிக மலராக, இறை வழிபாட்டு மலராக, சுப நிகழ்ச்சிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும், வாசனை திரவியம், ஆயுர் வேத மருத்துவப் பொருள் தயாரிப்பதற்காகவும் ரோஜா பெருமளவு பயிரிடப்படுகிறது.

ரோஜா மூலம் பன்னீர், அத்தர், குல்கந்து, சென்ட், பான்சாரி, குல்ரோகான் தயாரிப்பில் பல லட்சம் ரூபாய் லாபம் பார்க்க இயலும். ரோஜா ஒரு காதல் மலராகும். உலகின் பல நாடுகள் ரோஜாவை தன் தேசிய மலராக மதிக்கின்றன.

குறிப்பாக அமெரிக்கா, பல்கேரியா, இக்குவேடார், ஈரான், ஈராக் லக்சம்பார்க், மாநிலத்தீவுகள், இத்தகைய சிறப்பை ரோஜாவுக்கு அளிப்பது கண்கூடு. ரோஜா என்ற அழகு மலரை பசுமைக்குடில், திறந்த வெளி, ஊடுபயிர் முறையில் சாகுபடி செய்ய ஏற்றது.

அதிக வளம் உள்ள வண்டல் மண் மட்டுமல்லாமல் நல்ல வடிகால் வசதியுள்ள மண்ணில் ரோஜா வளர்த்து லாபம் அடையலாம். தளிர், உவர் மண்ணில் ரோஜா வளராது. நிலத்தில் நல்ல காற்றோட்டம் உள்ளதாகவும், போதிய சூரிய ஒளியும் இருக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 2,000 செடிகள் பதியன்கள் எனப்படும் வேர் பிடித்த குச்சிகள் மூலம் நடுவதற்கு உரிய குழிகள் எடுத்தே நடவு செய்ய வேண்டும்.

எட்வர்டு ரோஜாவுக்கு தஞ்சாவூர் ரோஜா என்பது மறு பெயர். ஆடிப்பட்டம் நடுவதற்கு இப்போதே நாற்று செடிகள் தயாரித்திட திட்டம் வகுத்தல் மாலை வேலைகளில் ஒன்றரை அடி நீளம், ஒன்றரை அடி அகலம், ஒன்றரை அடி ஆழ குழிகளில் நட்டு பராமரிக்கலாம். சொட்டு நீர்ப்பாசன அமைப்பு மூலம் நீரில் கரையும் உரங்கள் அளித்து ஆண்டு முழுவதும் ஐ.பி.எம். முறைகளை கடைப்பிடித்தால் தரமான பூக்கள் பெறலாம்.

நட்ட முதல் ஆண்டிலேயே பூத்து பலன் தந்தாலும், ரோஜா இரண்டாம் ஆண்டு முதல் நிலையான மகசூல் தரும். ஒரு ஏக்கரில் ரோஜா பயிரிட 80 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும். எனினும் சராசரியாக 7 டன் ரோஜா மலர்கள் மூலம் மூன்று லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். தொடர்புக்கு 98420 07125.

- டாக்டர் பா.இளங்கோவன்

வேளாண் துணை இயக்குனர், தேனி.







      Dinamalar
      Follow us