/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
புட்டு உணவுக்கு ஏற்ற காடை கழுத்தான் ரக நெல்
/
புட்டு உணவுக்கு ஏற்ற காடை கழுத்தான் ரக நெல்
PUBLISHED ON : ஜன 24, 2024

காடை கழுத்தான் ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், மலையாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி முனைவர் என்.மகாலட்சுமி கூறியதாவது:
பாரம்பரிய ரக நெல்லில், காடை கழுத்தான் ரக நெல் தனியாகும். இது, 165 நாளில் விளைச்சல் தரக்கூடியது. அனைத்து விதமான பருவ காலங்களிலும், வளரும் தன்மை உடையது.
இந்த நெல்லின் மேல் பகுதியில், வெள்ளை நிறத்துடன் கோடு இருப்பதால், காடை கழுத்தான் என பெயர் வந்தது.
இந்த நெல்லில், இயற்கையாகவே நோய் எதிர்ப்பு தன்மை இருப்பதால், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அறவே இருக்காது.
குறிப்பாக, பாரம்பரிய ரக நெல்லில் கிடைக்கும் அனைத்து மருத்துவ குணங்களும், இந்த காடை கழுத்தான் ரக அரிசியில் கிடைக்கிறது. புட்டு உணவுக்கு ஏற்ற ரகம்.
ஒரு ஏக்கருக்கு, 16 மூட்டை நெல் மகசூல் கிடைக்கும். இதை, அரிசியாக மாற்றி விற்பனை செய்யும் போது கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: என். மகாலட்சுமி,
98414 42193.