sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு மஞ்சள் ஒட்டுப்பொறி

/

சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு மஞ்சள் ஒட்டுப்பொறி

சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு மஞ்சள் ஒட்டுப்பொறி

சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு மஞ்சள் ஒட்டுப்பொறி


PUBLISHED ON : டிச 05, 2012

Google News

PUBLISHED ON : டிச 05, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத் தில் காய்கறிப் பயிர்கள் பயிரிடப்படும் எல்லா இடங்களிலும் பரவலாகக் காணப்படும் சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ, இலைப்பேன், அசுவினி போன்றவை நேரடியாக பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதோடு புகையிலை, மரவள்ளி, பருத்தி, சோயாமொச்சை போன்ற பயிர்களில் இலைச்சுருள் என்னும் நோயைத் தோற்றுவிக்கக்கூடிய நச்சுயிரி யையும் வெண்டைப்பயிரில் நரம்பு வெளுத்தல் நோயைத் தோற்றுவிக்கக்கூடிய நச்சுயிரியையும் இந்தப் பூச்சிகள் பரப்பு கின்றன. மேலும் இந்தப் பூச்சிகள் வெளியிடும் தேன் போன்ற திரவம் இலைகள், காய்கள் போன்றவற்றின் மேல் படிந்திருந்து, அதன்மேல் கரும்படல நோய் என்னும் பூசண நோயும் தோன்றி பயிருக்கு மேலும் அதிகக் கேடு விளைவிக்கிறது.

இந்தப் பூச்சிகள் பயிரின் எல்லா வளர்ச்சிப்பருவத்திலும் குறிப்பாக இளம் வளர்ச்சிப்பருவத்தில் அதிக அளவில் தாக்கி, அதிக சேதத்தை விளைவிக்கக்கூடியது. இளம்பூச்சிகளும் வளர்ந்த பூச்சிகளும் இலைகளின் அடிப்பரப்பில் ஏராளமான எண் ணிக்கையில் இருந்துகொண்டு தொடர்ந்து சாற்றை உறிஞ்சுவ தால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, பின்னர் காய்ந்துவிடுகின் றன. பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளபோது இலைகள், பூக்கள், பிஞ்சுக்காய்கள் ஆகியவை அதிக அளவில் உதிர்ந்துவிடும்.

பூச்சிக்கட்டுப்பாடு:



மஞ்சள் இரும்புத்தகடு அல்லது மஞ்சள் டப்பாக்களில் ஆமணக்கு எண்ணெயை தடவி வயலில் வைக்க வேண்டும். இந்த நிறத்தினால் கவரப்படும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அந்தப் பொறிகளில் ஒட்டிக்கொள்ளும். ஒவ்வொருநாளும் ஒட்டிக் கொள்ளும் பூச்சிகளை துடைத்து எடுத்துவிட்டு மீண்டும் எண்ணெயை தடவ வேண்டும். ஒரு ஏக்கருக்கு 10-12 மஞ்சள் ஒட்டுப்பொறி வைத்து கட்டுப்படுத்தலாம்.

முனைவர் கோ.பி.வனிதா

வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை

முனைவர் ரா.கோபாலகிருஷ்ணன்,

ரோவர் வேளாண்மைக்கல்லூரி, பெரம்பலூர்.






      Dinamalar
      Follow us