/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதலீட்டுக்கு உகந்த மாநிலம் எப்.கே.சி.சி., யோசனை
/
முதலீட்டுக்கு உகந்த மாநிலம் எப்.கே.சி.சி., யோசனை
ADDED : மார் 07, 2025 11:12 PM

பெங்களூரு: பட்ஜெட் குறித்து, எப்.கே.சி.சி., எனும் கர்நாடக வர்த்தக தொழில்துறை கூட்டமைப்பு தலைவர் பாலகிருஷ்ணா வெளியிட்டுள்ள அறிக்கை:
கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் வரை பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டதை வரவேற்கிறோம்.
தொழில் துறை,வர்த்தக துறையை ஊக்குவிக்கும் வகையில், 'ஹைபிரிட்' வாகனங்களுக்கு வரி விலக்கு, மின்சார வாகனங்களுக்கு ஊக்கத்தொகை போன்றவை வரவேற்கத்தக்கது.
நிலையான வளர்ச்சி இலக்கை அடைய, பொருளாதாரத்தை விரைவுபடுத்த, மண்டல ஏற்றத்தாழ்வுகளை குறைக்க, தனி எம்.எஸ்.எம்.இ., கொள்கையை உருவாக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
அரசின் தொலைநோக்கு பார்வையை, எப்.கே.சி.சி., ஏற்றுக் கொள்கிறது.
அதேவேளையில், முதலீடுக்கு உகந்த மாநிலமாக மாற்றதிட்டமிடலை சரியாக செயல்படுத்தவேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.