ADDED : செப் 13, 2026 11:26 PM
அ நிறம் | அளவு
மாண்டியா: மாண்டியாவின் மத்துாரில் கடந்த ஆண்டு, விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, ராம் ரஹிம் காலனியில் உள்ள வீட்டில் இருந்து, விநாயகர் சிலைகள் மீது கல் வீசப்பட்டது.
இரு சமூகத்தினர் இடையில் மோதல் ஏற்பட்டு கலவரம் உண்டானது. இரு சமூகத்திலும் பலர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு கைவிடப்படும் என்று அரசு அறிவித்தது.
ஆனால், ஓராண்டு கழித்து கலவரம் தொடர்பாக, வி சாரணைக்கு ஆஜராகும்படி, பா.ஜ., தலைவர்கள், 23 பேருக்கு, மத்துார் போலீசார் நேற்று 'சம்மன்' அனுப்பியுள் ள னர்.
