sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பிரசவித்த பெண்கள் இறந்த விவகாரம்; அரசு மருத்துவமனையில் தான் 66 சதவீதம்

/

பிரசவித்த பெண்கள் இறந்த விவகாரம்; அரசு மருத்துவமனையில் தான் 66 சதவீதம்

பிரசவித்த பெண்கள் இறந்த விவகாரம்; அரசு மருத்துவமனையில் தான் 66 சதவீதம்

பிரசவித்த பெண்கள் இறந்த விவகாரம்; அரசு மருத்துவமனையில் தான் 66 சதவீதம்


ADDED : ஏப் 05, 2025 07:52 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 07:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : ''கர்நாடகாவில் பிரசவித்த பெண்கள் இறப்பு சம்பவத்தில், அரசு மருத்துவமனைகளில் 66 சதவீதம் நடந்துள்ளதாக, இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது,'' என சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

கர்நாடகாவில் கடந்தாண்டு பிரசவித்த பெண்கள் இறப்பு அதிகரித்தது தொடர்பாக, மாநில அளவிலான நிபுணர் கமிட்டி அமைக்கப்பட்டிருந்தது. இக்கமிட்டியினர், இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்து உள்ளனர்.

அரசு மருத்துவமனை


இக்குழுவினர், 2024 ஏப்ரல் 1 முதல் 2024 டிசம்பர் 31ம் தேதி வரை 464 பிரசவித்த பெண்கள் இறப்பு குறித்து ஆய்வு நடத்தினர். அதில், 66 சதவீத இறப்புகள், அரசு மருத்துவமனைகளில் நடந்துள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் 22 சதவீதம் நடந்துள்ளன. உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை, நீரிழிவு போன்ற கடுமையான மருத்துவ பிரச்னைகளால், 68 சதவீத பெண்கள் இறந்துள்ளனர்.

அறுவை சிகிச்சையின் போது 63 சதவீத பெண்கள் உயிரிழந்துள்ளனர். அஜாக்கிரதையால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இது சம்பந்தமாக டாக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 65 இறப்புகள், கிராமப்புற பகுதிகளில் நடந்துள்ளன.

மேலும், 10 சதவீத கர்ப்பிணியினர் மருத்துவமனைக்கு வரும் போது இறந்துள்ளனர்; 2 சதவீத கர்ப்பிணியினர், வீட்டிலேயே இறந்துள்ளனர்.

இறப்பு அதிகம்


இதில், 19 முதல் 25 வயதுக்கு உட்பட்ட கர்ப்பிணியர் 50 சதவீதம் பேரும்; 26 முதல் 30 வயதுக்கு உட்பட்டோர் 30 சதவீதமும்; 31 முதல் 35 வயதுக்கு உட்பட்டோர் 13 சதவீதம் பேரும் அடங்குவர்.

'ரிங்கர் லாக்டேட்' என்பது நரம்பு வழியாக செலுத்தப்படும் திரவமாகும். இந்த மருந்து செலுத்தியதில் பல்லாரியில் 5, ராய்ச்சூரில் 4, பெங்களூரு நகரில் 4, உத்தர கன்னடாவில் 3, யாத்கிர், பெலகாவியில் தலா 1 என மொத்தம் 18 பிரசவித்த பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

தரம் குறைந்த ரிங்கர் லாக்கேட் வினியோகித்த மேற்கு வங்கத்தை சேர்ந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்த சோகை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, நோய் தொற்று போன்ற ஆபத்தான பிரச்னைகளை கண்டறிந்து சிகிச்சை அளித்திருந்தால், 70 சதவீத இறப்பை தடுத்திருக்கலாம்.

அதுபோன்று, மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் போது, பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கும் விகிதத்தை குறைக்க வேண்டும்.

பின்பற்றவில்லை


சுகாதார மையங்களில், பிரசவத்துக்கு முன்பும், பின்பும் தரமான பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். 10 சதவீதம் இறப்புகள், வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அல்லது இன்னொரு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் நடக்கின்றன.

பிரசவித்த பெண்கள் இறப்பு சதவீதத்தை குறைக்க, ஒவ்வொரு தாலுகாக்களிலும் இரண்டு மகப்பேறு மருத்துவர்கள், இரண்டு குழந்தைகள் நல மருத்துவர்கள், ஒரு மயக்க மருந்து நிபுணர் இருக்க வேண்டும் உட்பட 27 ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us