ADDED : ஜூலை 10, 2026 12:25 AM
அ நிறம் | அளவு
முல்பாகல்: முல்பாகலின் மல்லகுப்பா கிராமத்தை சேர்ந்த நீரா மதுசூதன் என்ற பெண், அஸ்வத் கண்டே என்ற இடத்தில் நடைபயிற்சி சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், அவரின் கழுத்தில் அணிந்திருந்த, 70 கிராம் தங்க தாலி செயினை பறித்து தலைமறைவாகினர்.
இதுகுறித்து, முல் பாகலின் நங்கிலி போலீஸ் நிலையத்தில் நீரா மதுசூதன் புகார் செய்தார். கோலார் எஸ்.பி., கன்னிகா சிக்ரிவால் விசாரித்து வருகிறார்.
