/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோடையில் தண்ணீர் பஞ்சம் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்க கூடுதல் தலைமை செயலர் அறிவுறுத்தல்
/
கோடையில் தண்ணீர் பஞ்சம் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்க கூடுதல் தலைமை செயலர் அறிவுறுத்தல்
கோடையில் தண்ணீர் பஞ்சம் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்க கூடுதல் தலைமை செயலர் அறிவுறுத்தல்
கோடையில் தண்ணீர் பஞ்சம் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்க கூடுதல் தலைமை செயலர் அறிவுறுத்தல்
ADDED : மார் 04, 2026 05:54 AM

பெங்களூரு: பெங்களூரில் கோடை காலத்தின் போது, தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, குடிநீர் வாரிய அதிகாரிகள் விரைந்து எடுக்குமாறு நகர்ப்புற மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலர் துஷார் கிரிநாத் அறிவுறுத்தி உள்ளார்.
பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று மறுசீராய்வு கூட்டம் நடந்தது.இதில், குடிநீர் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர், நகர்ப்புற மேம்பாட்டு துறையின் கூடுதல் தலைமை செயலர் துஷார் கிரிநாத் மற்றும் பலர் பங்கேற்றனர்.
துஷார் கிரிநாத் பேசியதாவது:
பெங்களூரில் கோடை காலத்தின் போது, தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருப்பதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குடிநீர் வாரிய அதிகாரிகள் விரைந்து எடுக்க வேண்டும். கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட வார்டுகளிலும், கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பாடமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகரின் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள பகுதிகளில், தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. புதிய நீர் இணைப்புகளை வழங்கும் செயல்முறை விரைந்து முடிக்க வேண்டும். கோடை வருவதற்கு முன்பே அனைத்து பணிகளும் முடிக்கப்பட வேண்டும்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களில் பழுதுபார்க்கும் பணி விரைவில் நடைபெற வேண்டும். தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ள, 65 வார்டுகளில் தனித்தனி பொறியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

