ADDED : ஜூன் 06, 2026 03:45 AM
அ நிறம் | அளவு
தங்கவயல்: 'கர்நாடக மாநிலத்தில் புகையிலை, போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' என, தங்கவயல் பல் அறிவியல் கல்லுாரி மாணவர்கள், ராபர்ட்சன் பேட்டை பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
சம்பிரம் பல் அறிவியல் கல்லுாரி மாணவர்கள், பதாகைகளை ஏந்திய படி, முழக்கங்களை எழுப்பினர். புகையிலை தனிப்பட்ட வாழ்க்கையை சீரழிப்பது மட்டுமல்லாமல், துன்பத்திற்கு வழிவகுக்கிறது என வலியுறுத்தும் பதாதைகளை அவர்கள் ஏந்தி வந்தனர்.
