sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 'பார்ட்டி'யில் மது குடித்த சிறுவன் பெற்றோருக்கு பயந்து தற்கொலை

/

 'பார்ட்டி'யில் மது குடித்த சிறுவன் பெற்றோருக்கு பயந்து தற்கொலை

 'பார்ட்டி'யில் மது குடித்த சிறுவன் பெற்றோருக்கு பயந்து தற்கொலை

 'பார்ட்டி'யில் மது குடித்த சிறுவன் பெற்றோருக்கு பயந்து தற்கொலை


ADDED : நவ 12, 2025 09:58 PM

Google News

ADDED : நவ 12, 2025 09:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கமகளூரு: திருட்டுத்தனமாக விருந்தில் மது அருந்திய சிறுவன், பெற்றோருக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.

கர்நாடகாவில், சிறிய விஷயங்களுக்காக, சிறார் தற்கொலை செய்து கொள்வது நடக்கிறது. அறிவுரை கூறியது, மொபைல் போனை பயன்படுத்த தடை விதித்தது, பெற்றோர் திட்டியது என, பல காரணங்களுக்காக அவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

பெங்களூரில் சில நாட்களுக்கு முன்பு, தன் ஆருயிர் தோழி இறந்ததால், பள்ளிச்சிறுமி தற்கொலை செய்த சம்பவம் நடந்தது. இதே போன்ற சம்பவம், சிக்கமகளூரில் நடந்துள்ளது.

சிக்கமகளூரு மாவட்டம், என்.ஆர்.புரா தாலுகாவின், பாளஹொன்னுார் அருகில் உள்ள மேல்வார் கிராமத்தில் வசித்தவர் பிரவச்சன், 13. இவர் அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்தார். நான்கு நாட்களுக்கு முன்பு, உறவினர் இல்லத்தின் திருமண நிகழ்ச்சிக்கு பெற்றோருடன் சென்றிருந்தார். அங்கு நடந்த திருமண பார்ட்டியில், பிரவச்சன் திருட்டுத்தனமாக மது அருந்தினார்.

இந்த விஷயம் பெற்றோருக்கு தெரிந்தால் திட்டுவர், அடிப்பர் என, அஞ்சினார். இதே பயத்தில் இவர், நேற்று அதிகாலை துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, பாளஹொன்னுார் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது.






      Dinamalar
      Follow us