sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 யானை மீது மோதியதில் சின்னாபின்னமான கார்

/

 யானை மீது மோதியதில் சின்னாபின்னமான கார்

 யானை மீது மோதியதில் சின்னாபின்னமான கார்

 யானை மீது மோதியதில் சின்னாபின்னமான கார்


ADDED : நவ 16, 2025 11:18 PM

Google News

ADDED : நவ 16, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கமகளூரு: சாலையை கடந்த யானை மீது, கார் மோதியதில் கார் நொறுங்கியது. அதில் இருந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சிக்கமகளூரு மாவட்டம், என்.ஆர்.புரா தாலுகாவின் ஆடுவள்ளி அருகில் உள்ள பூரதமனே கிராமத்தில் வசிப்பவர் பிரதீப். இவர் பணி நிமித்தமாக என்.ஆர்.புராவுக்கு, நேற்று முன் தினம் வந்திருந்தார். பணி முடிந்த பின், இரவு ஊருக்கு காரில் புறப்பட்டார்.

ஆடுவள்ளி கிராமத்தின் வனப்பகுதி சாலையில் செல்லும் போது, இரண்டு யானைகள் சாலையை கடந்து சென்றன. ஒரு யானை சென்று விட்டது. ஒரு யானை சாலை நடுவில் திடீரென நின்றது.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த பிரதீப்பின் கார், யானை மீது மோதியது. மோதிய வேகத்தில் யானை கார் மீது விழுந்தது. பயந்து போன யானை, அங்கிருந்து எழுந்து வனத்துக்குள் ஓடிவிட்டது.

யானை விழுந்ததில் பாரம் தாங்காமல், கார் சின்னாபின்னமானது. பிரதீப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.






      Dinamalar
      Follow us