sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/  போக்குவரத்து விதிகளை மீறிய 1,372 பேர் மீது வழக்கு பதிவு

  போக்குவரத்து விதிகளை மீறிய 1,372 பேர் மீது வழக்கு பதிவு

  போக்குவரத்து விதிகளை மீறிய 1,372 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : ஜூன் 01, 2026 12:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 12:17 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மங்களூரு: மங்களூரில் கடந்த ஒரு வாரத்தில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிய 1,372 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களிடமிருந்து 6.24 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தட்சிண கன்னடாவின் மங்களூரு நகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இருப்பினும், வாகன ஓட்டிகள் பலரும் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதில்லை. இதனால், சாலை விபத்துகள் அதிக எண்ணிக்கையில் நடக்கின்றன. அதுபோல, ஹெல்மெட் அணியாமல் பலரும் பைக், ஸ்கூட்டர்களை ஓட்டுகின்றனர்.

இவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் போக்குவரத்து போலீசார், கடந்த வாரம் முழுதும் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். நகரில் உள்ள பல முக்கிய சந்திப்புகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

இதில், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டிய 1,050 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களிடமிருந்து 4.63 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. 'ஒன்வே' யில் தவறான திசையில் வாகனம் ஓட்டிய 322 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவர்களிடமிருந்து 1.61 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த சோதனை 7 நாட்கள் நடந்தது.

போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'விழிப்புணர்வுக்காகவே அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்ற நடவடிக்கைகள் வருங்காலத்திலும் நடத்த திட்டமிட்டு உள்ளோம்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us