தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 22 ரவுடிகள் வெளியேற்றம் கமிஷனர் சசிகுமார் தகவல்

22 ரவுடிகள் வெளியேற்றம் கமிஷனர் சசிகுமார் தகவல்

22 ரவுடிகள் வெளியேற்றம் கமிஷனர் சசிகுமார் தகவல்


ADDED : ஆக 22, 2025 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2025 11:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தார்வாட்: ''சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் வகையில், மாவட்டத்தில் இருந்து 22 ரவுடிகள், வெளியேற்றப்பட்டுள்ளனர்,'' என, தார்வாட் - ஹூப்பள்ளி நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் தெரிவித்தார்.

தார்வாடில் அவர் நேற்று அளித்த பேட்டி:

விநாயகர் சதுர்த்தி, மிலாடி நபி பண்டிகைகளை முன்னிட்டு, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் போதைப் பொருள், மட்கா, கிரிக்கெட் சூதாட்டம் உட்பட குற்றங்களில் ஈடுபட்ட ரவுடிகள் அடையாளம் காணப்பட்டனர்.

இவர்களில் இதுவரை 83 ரவுடிகள் மாவட்டத்தை விட்டு வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. க டந்த இரண்டு நாட் களில் 22 பேர் வெளியேற்றப்பட்டனர். இரட்டை நகரங்களான தார்வாட் - ஹூப்பள்ளியில் 1,300 ரவுடிகள் உள்ளனர். இவர்களில் 100 பேர் வெவ்வேறு வழக்குகளில், நீதிமன்ற காவலில் உள்ளனர். வெளியே உள்ள ரவுடிகளை கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us