தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கள்ள நோட்டு தயாரிப்பு: மேலும் 3 பேர் கைது

 கள்ள நோட்டு தயாரிப்பு: மேலும் 3 பேர் கைது

 கள்ள நோட்டு தயாரிப்பு: மேலும் 3 பேர் கைது


ADDED : செப் 04, 2026 03:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 03:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராம்நகர்: கள்ள ரூபாய் நோட்டு தயாரித்த கும்பலை சேர்ந்த, மேலும், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு தெற்கு மாவட்டம் ராம்நகர் டவுனில் கட்டுமானத்தில் உள்ள வீட்டில் 200, 500 ரூபாய் கள்ள ரூபாய் நோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்டதாக, வீட்டின் உரிமையாளர் சந்தோஷ் உட்பட, ஏழு பேரை, கடந்த மாதம் 31ம் தேதி ஐசூர் போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், சாம்ராஜ்நகரை சேர்ந்த அஸ்ரப் அலி, 35, என்பவர், கள்ள நோட்டு தயாரிக்கும் கும்பலின் தலைவன் என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடிவந்த நிலையில், சாம்ராஜ்நகரின் கொள்ளேகாலில் கைது செய்யப்பட்டார்.

இவரது கூட்டாளிகள் கனகபுராவின் மஞ்சு, 37, நாகராஜ், 48, ஆகியோரும் போலீசில் சிக்கியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us