sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தந்தை இறந்ததால் மகள் தற்கொலை

தந்தை இறந்ததால் மகள் தற்கொலை

தந்தை இறந்ததால் மகள் தற்கொலை


ADDED : அக் 11, 2025 11:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2025 11:06 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கபல்லாபூர்: தந்தையின் இறந்ததால் மனம் நொந்த மகள், தற்கொலை செய்து கொண்டார்.

சிக்கபல்லாபூர் மாவட்டம், கவுரிபிதனுார் நகரின் நாகிரெட்டி லே - அவுட்டில் வசித்தவர் சுவர்ணா, 22. இவர் பெங்களூரின் மஹாராணி கல்லுாரியில் எம்.எஸ்.சி., படித்தார்; விடுதியில் தங்கியிருந்தார். இவரது தந்தை மூன்று மாதங்களுக்கு முன்பு காலமானார். திடீரென தந்தையை இழந்ததால், சுவர்ணா மனம் நொந்தார்.

இதனால், நேற்று முன் தினம், கல்லுாரி விடுதியில், எலி மருந்தை தின்று உள்ளார். பின்னர் ஊருக்கு சென்றார். தன் தாயிடம் விஷயத்தை கூறி உள்ளார். உடனடியாக சிக்கபல்லாபூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தந்தையும், அக்காவும் இறந்ததால் சுவர்ணாவின் தம்பியும் மனதளவில் நொந்துள்ளார். இதை உணர்ந்த தாய், மகனுக்கும் ஏதாவது ஆகிவிடுமோ என, கவலையில் ஆழ்ந்துள்ளார்.

பெங்களூரின் ஹைகிரவுண்ட் போலீசார், சிக்கபல்லாபூர் சென்று, சுவர்ணாவின் தாயிடம் விசாரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us