ADDED : மே 29, 2026 12:13 AM
அ நிறம் | அளவு
மைசூரு: குடகு மாவட்டம், மடிகேரி தாலுகாவின், ஹெரவநாட் கிராமத்தை சேர்ந்தவர் ரோஷன் பாலகிருஷ்ணா, 43. இவர் பெங்களூரின், ஐ.டி., நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றினார். ஐ.டி., நிறுவனத்தின் பணி அழுத்தத்தால், வெறுப்படைந்த அவர், கடந்த சில மாதங்களுக்கு முன், ஐ.டி., தொழிலுக்கு முழுக்கு போட்டுவிட்டு, விவசாயத்தில் ஈடுபட்டார்.
மைசூரு மாவட்டம், யலவாளா அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்கிறார். மே 26ம் தேதியன்று, மனைவி, மகனுடன் நிலத்துக்கு சென்றிருந்தார். மாங்காய் பறிப்பதில் ஈடுபட்டனர். அப்போது பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
மழையை பொருட்படுத்தாமல் மாங்காய் பறிக்கும் போது , இடி தாக்கியதில் ரோஷன் காயமடைந்தார். அவரை மருத்துவனைக்கு அழைத்து செல்லும் போது, வழியில் உயிரிழந் தார்.
