/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மகளுடன் தொடர்பு வைத்தவரை அடித்து கொன்ற தந்தை, மகன் கைது
/
மகளுடன் தொடர்பு வைத்தவரை அடித்து கொன்ற தந்தை, மகன் கைது
மகளுடன் தொடர்பு வைத்தவரை அடித்து கொன்ற தந்தை, மகன் கைது
மகளுடன் தொடர்பு வைத்தவரை அடித்து கொன்ற தந்தை, மகன் கைது
ADDED : அக் 27, 2025 03:55 AM
பீதர்: பீதர் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த மஹாராஷ்டிராவை சேர்ந்த நபர், பெண்ணின் குடும்பத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
மஹாராஷ்டிரா மாவட்டம் நந்தென் மாவட்டம் குனாகோன் கிராமத்தை சேர்ந்தவர் விசு, 27. கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தின் சிந்தகி கிராமத்தை சேர்ந்த பெண் பூஜா. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனியாக வசித்து வந்தார்.
அப்போது இவருக்கும், விசுவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது; இருவரும் நெருக்கமாக இருந்தனர். இது பூஜாரின் பெற்றோருக்கும் தெரியும். மூன்று மாதங்களுக்கு முன், பெற்றோர் வசிக்கும் நாகனபள்ளிக்கு பூஜா சென்றிருந்தார்.
பூஜாவை பார்க்க, விசு, தனது இரு நண்பர்களுடன் நாகனபள்ளி கிராமத்துக்கு கடந்த 21ம் தேதி சென்றார். கிராமத்தில் உள்ள ஹனுமன் கோவிலில் அமர்ந்திருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த பூஜாவின் தந்தை அசோக், சகோதரர் கஜனன், விசுவை பார்த்ததும் கோபம் அடைந்தனர்.
கோவிலில் இருந்து அவரை வெளியே இழுத்து வந்து, கை, கால்களை கட்டி உருட்டு கட்டையால் சரமாரியாக அடித்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் அங்கு சென்ற போது, மயக்க நிலையில் இருந்த விசுவை, சிந்தகி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின், பீதரில் உள்ள பிரிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், விசு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த விசுவின் தாயார் லட்சுமி அளித்த புகாரின்படி, பூஜாவின் தந்தை, சகோதரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். விசுவை அடிப்பதையும், அதை கிராமத்தினர் வேடிக்கை பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

