sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நீரில் மூழ்கி நால்வர் பலி

 நீரில் மூழ்கி நால்வர் பலி

 நீரில் மூழ்கி நால்வர் பலி


ADDED : ஜூன் 07, 2026 11:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 11:39 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

யாத்கிர்: யாத்கிர் மாவட்டம், வடகேரா தாலுகாவின், பசவநகரா கிராமத்தில் வசித்தவர்கள் குண்டம்மா, 35, சுஜாதா, 11, சிவகாந்தா, 9. இவர்கள் மூவரும் நேற்று காலை துணி துவைக்கும் நோக்கில், கிராமத்தின் அருகில் உள்ள கல்குவாரி குளத்துக்கு வந்தனர். துணி துவைக்கும் போது, சிறுமியர் நீரில் தவறி விழுந்தனர்.

இதை கண்ட குண்டம்மா, சிறுமியரை காப்பாற்ற, தான் அணிந்திருந்த சேலையை கொடுத்தார். நீரில் இருந்து வெளியே வரும் அவசரத்தில், சிறுமியர் சேலையை வேகமாக இழுத்ததில், குண்டம்மாவும் நீரில் விழுந்தார். மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இது குறித்து, தகவலறிந்து அங்கு வந்த வடகேரா போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன், மூவரின் உடல்களை வெளியே எடுத்தனர்.

பெலகாவி மாவட்டம், பைலஹொங்கலா தாலுகாவின் , வக்குந்தா கிராமத்தில் வசித்தவர் மகேஷ், 15. நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால், கிராமத்தின் புறநகரில் உள்ள மல்லபிரபா ஆற்றுக்கு வந்தார். வெள்ளம் பாய்ந்து செல்வதை பொருட்படுத்தாமல், நீரில் இறங்கி நீச்சலடித்தார். ஆழமான பகுதிக்கு சென்றதால், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us