sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பைரதி பசவராஜ் மீதான 'கோகா' சட்டம் ரத்து; உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு

/

 பைரதி பசவராஜ் மீதான 'கோகா' சட்டம் ரத்து; உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு

 பைரதி பசவராஜ் மீதான 'கோகா' சட்டம் ரத்து; உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு

 பைரதி பசவராஜ் மீதான 'கோகா' சட்டம் ரத்து; உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு


ADDED : டிச 25, 2025 06:45 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கொலை வழக்கில் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் மீது, 'கோகா' சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை ரத்து செய்த, கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது.

பெங்களூரு பாரதிநகர் ரவுடி சிவகுமார் என்ற பிக்லு சிவா கொலை வழக்கில், கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் தலைமறைவாக உள்ளார். கைதில் இருந்து தப்பிக்க முன்ஜாமின் கேட்டு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இரு நீதிமன்றத்திலும் இவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் ஒரே ஆறுதலாக பைரதி பசவராஜ் மீது, 'கோகா' சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை, உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதனால் எம்.எல்.ஏ., சற்று நிம்மதி அடைந்து இருந்தார்.

ஆனால், இதற்கும் காங்கிரஸ் அரசு ஆப்பு வைத்து உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, வழக்கை விசாரிக்கும் சி.ஐ.டி.,க்கு அனுமதி வழங்கி, உள்துறை நேற்று உத்தரவிட்டு உள்ளது. விரைவில் சி.ஐ.டி., போலீசார் மேல்முறையீடு செய்ய உள்ளனர்.

'கோகா' என்பது, கர்நாடக ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கட்டுப்பாட்டு சட்டம் என்பதன் சுருக்கம். இந்த சட்டத்தின் கீழ் ஒருவர் மீது வழக்குப் பதிவானால் அவரது சொத்துகளை பறிமுதல் செய்யவும் சட்டத்தில் இடம் உள்ளது. ஜாமினும் எளிதில் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us