sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சிறுமி கருவை கலைக்க உயர் நீதிமன்றம் அனுமதி

/

சிறுமி கருவை கலைக்க உயர் நீதிமன்றம் அனுமதி

சிறுமி கருவை கலைக்க உயர் நீதிமன்றம் அனுமதி

சிறுமி கருவை கலைக்க உயர் நீதிமன்றம் அனுமதி


ADDED : பிப் 01, 2025 12:34 AM

Google News

ADDED : பிப் 01, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் ஆறு மாத கருவை கலைப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆறு மாதங்களுக்கு முன்பு, பெங்களூரை சேர்ந்த 16 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்தார். சிறுமி கருவுற்றது தெரிந்ததும் அவரது பெற்றோர், கடந்த மாதம் 15ம் தேதி போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், இளைஞர் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த மாதம் 18ம் தேதி சிறுமிக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவரது வயிற்றில் ஆறு மாத கரு இருப்பது தெரிந்தது. இதனிடையே கருவை கலைக்க அனுமதிக்குமாறு சிறுமியின் தாய் குழந்தை நல வாரியத்திடம் கோரிக்கை விடுத்தார். குழந்தை நல வாரியமும், சிறுமியை அரசு குழந்தை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தது.

இதற்கிடையில் சிறுமியின் கருவை கலைக்க, வாணி விலாஸ் மருத்துவமனைக்கு உத்தரவிடும்படி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவரது தாய் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிறுமிக்கு கருக்கலைப்பு செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா என்பது குறித்து வாணி விலாஸ் மருத்துவமனை சார்பில் அறிக்கை அளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கு, நேற்று நீதிபதி ஆர்.தேவதாஸ் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியதாவது:

மைனர் கருக்கலைப்பு விதி 1971ன் படி கருவை கலைக்கலாம். டாக்டரின் அறிவுறுத்தல் படியே கருக்கலைப்பு நடத்த வேண்டும். இது தொடர்பான முடிவை டாக்டரே எடுக்கலாம். கருக்கலைப்பின்போது எடுக்கப்படும் டி.என்.ஏ., மாதிரியை பெங்களூரில் உள்ள மத்திய தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும். இதற்கான செலவை அரசே ஏற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us