sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ரவுடி நாகா மீதான வழக்கு தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

/

ரவுடி நாகா மீதான வழக்கு தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

ரவுடி நாகா மீதான வழக்கு தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

ரவுடி நாகா மீதான வழக்கு தள்ளுபடி செய்தது ஐகோர்ட்


ADDED : மே 06, 2025 05:25 AM

Google News

ADDED : மே 06, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: போதை பொருள் கடத்தியதாக, ரவுடி வில்சன் கார்டன் நாகா மீது தொடரப்பட்ட வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பெங்களூரு, கோரமங்களாவில் 2021 செப்., 23ம் தேதி அப்பையா என்ற ராஜு என்பவரிடம் இருந்து என்.சி.பி., எனும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், 12.20 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், ரவுடி வில்சன் கார்டன் நாகா வழங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து, இருவர் மீது கோரமங்களா போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரவுடி நாகா மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு மீது நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. இருதரப்பு வக்கீல்களின் வாதங்களையும் கேட்டறிந்தார்.

பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ''போதைப்பொருள் வைத்திருந்த நபர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதை தவிர்த்து, மனுதாரருக்கு எதிராக விசாரணை அதிகாரிகள் வேறு எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை. எனவே, மனுதாரர் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது,'' என்றார்.






      Dinamalar
      Follow us