/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.எஸ்.எஸ்., குறித்து ஹிரிபிரசாத் கடும் விமர்சனம்
/
ஆர்.எஸ்.எஸ்., குறித்து ஹிரிபிரசாத் கடும் விமர்சனம்
ஆர்.எஸ்.எஸ்., குறித்து ஹிரிபிரசாத் கடும் விமர்சனம்
ஆர்.எஸ்.எஸ்., குறித்து ஹிரிபிரசாத் கடும் விமர்சனம்
ADDED : ஏப் 08, 2026 04:33 AM

தாவணகெரே: ''ஆர்.எஸ்.எஸ்., ஒரு போலி தேசிய அமைப்பு,'' என, காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத் கடுமையாக விமர்சித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
கர்நாடகாவில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். பா.ஜ., வெறுப்பை விதைக்க முயற்சிக்கிறது. மக்களுக்கு தேவையானது கல்வி, சுகாதாரம் மற்றும் அமைதியே. ஆர்.எஸ்.எஸ்., ஒரு போலி தேசிய அமைப்பு.
பா.ஜ.,வின் நர்சரி பள்ளியில் தான் விஜயேந்திரா இருக்கிறார். சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து பா.ஜ.,வினர் பேசுவது அபத்தமானது. எதிர்க்கட்சி தலைவர் அசோக்கின் கன்னட புலமையை நான் நன்கு அறிவேன். சிறுபான்மையினர் மீது பா.ஜ., முதலை கண்ணீர் வடிக்கிறது.
இஸ்ரேலுக்கு அதிகப்படியான ஆதரவை இந்தியா வழங்குவதன் மூலமாக, நம் நட்பு நாடான ஈரானின் உறவு பாதிக்கலாம். இது, எரிபொருள் விலை உயர்வுக்கு வழிவகுக்கும்.
தாவணகெரே அமைதிக்கும், நல்லிணக்கத்திற்கும் பெயர் பெற்ற மாவட்டம். இங்கு சோசலிச, கம்யுனிஸ்ட் கட்சிகள் இணைந்து காங்கிரசை வளர்த்து உள்ளன. தாவணகெரேவில் உள்ள சாலை வசதி, பெங்களூரில் கூட கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.

